<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>SujeethG</title>
	<atom:link href="http://sujeethg.me/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://sujeethg.me</link>
	<description>Just another WordPress weblog</description>
	<lastBuildDate>Sun, 21 Feb 2010 23:23:35 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0</generator>
		<item>
		<title>யார்க்கும் குடியல்லோம்</title>
		<link>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 21 Feb 2010 23:23:35 +0000</pubDate>
		<dc:creator>sujeethg</dc:creator>
				<category><![CDATA[lyrics]]></category>

		<guid isPermaLink="false">http://sujeethg.me/?p=109</guid>
		<description><![CDATA[யாவும் நாம் எழு வீழும் சூளும் பகைக்கினி ஓலம் வீரம் பொழிய வா ஈனம் அழிய வா தீரம் உடையவா தீர்க்கம் ஆக வா இனியும் பொறுமை இல்லை பகையே எட்டப்போ இல்லை என்று போனால் இன்றே செத்துப்போ குட்டக்குனியும் கும்பல் எண்ணம் விட்டுப்போ வெட்டிக்குடை சாய்க்க முன்னர் தப்பிப்போ பொறுத்துப் பூமி ஆளும் எண்ணம் இல்லை  &#8211; பகை வறுத்துப் பூமி ஆள்வோம் இல்லை இனித் தொல்லை சாகத்துணிந்தோர்க்கு சமுத்திரம் எம்மட்டு சூளும் பகையெல்லாம் போகுமே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>யாவும் நாம் எழு வீழும்<br />
சூளும் பகைக்கினி ஓலம்</p>
<p>வீரம் பொழிய வா ஈனம் அழிய வா<br />
தீரம் உடையவா தீர்க்கம் ஆக வா</p>
<p>இனியும் பொறுமை இல்லை பகையே எட்டப்போ<br />
இல்லை என்று போனால் இன்றே செத்துப்போ<br />
குட்டக்குனியும் கும்பல் எண்ணம் விட்டுப்போ<br />
வெட்டிக்குடை சாய்க்க முன்னர் தப்பிப்போ<br />
பொறுத்துப் பூமி ஆளும் எண்ணம் இல்லை  &#8211; பகை<br />
வறுத்துப் பூமி ஆள்வோம் இல்லை இனித் தொல்லை</p>
<p>சாகத்துணிந்தோர்க்கு சமுத்திரம் எம்மட்டு<br />
சூளும் பகையெல்லாம் போகுமே உடைபட்டு<br />
நெஞ்சக் குருதியனை நிலத்திடை வடித்தே<br />
வஞ்சம் அழிக்கின்ற மா..மகம் புரிவம் யாம்<br />
யார்க்கும் குடியல்லோம் யாம் என்பதோர்ந்தனம்<br />
வந்தாரை வாழ வை வம்பிழுத்தா வாளை வை</p>
<p>நெஞ்சில் உரம் கொண்டோம் நேர்மைத் திறன் கொண்டோம்<br />
வஞ்சம் அழிக்கின்ற தாக நாம் திடம் கொண்டோம்<br />
எங்கும் படை கொண்டோம் எதிலும் தடை வென்றோம்<br />
என்றும் ஒளிந்தோடா மாபெரும் மறம் கொண்டோம்<br />
படையே எட்டப்போ பகையை விட்டுப்போ<br />
வெட்டிக்குடை சாய்க்க முன்னர் தப்பிப்போ</p>
<p>கிடைக்குமே ஆணை புறப்படும் தானை<br />
பகை சோர்ந்து பின்னலே அடையுமே வானை<br />
அச்சமோ மடமை அஞ்சாமை உடைமை<br />
வஞ்சம் புரிவோரை அழிப்பதெம் கடமை<br />
இனியும் பொறுமை இல்லை பொறுத்துப் பயனுமில்லை<br />
வந்தாரை வாழ வை வம்பிழுத்தா வாளை வை</p>
<p>விடுதலை விடிவெள்ளி ஒளிர்ந்திடுமே<br />
விரைவிலே விடியலும் பிறந்திடுமே<br />
பகையது படையுடன் தொலைந்திடுமெ<br />
தொலைந்த பின் அமைதியும் எம்வசமே</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழர் குடி</title>
		<link>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/</link>
		<comments>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Sun, 21 Feb 2010 23:22:08 +0000</pubDate>
		<dc:creator>sujeethg</dc:creator>
				<category><![CDATA[lyrics]]></category>

		<guid isPermaLink="false">http://sujeethg.me/?p=106</guid>
		<description><![CDATA[மறவர்குடி மலிந்தபடி மடிந்துபோவதெப்படி தடையை அடி படையை அடி ஏறு நீ படிப்படி தடைகள் தகர்த்து படைகள் உடைத்து துணிவாய் முடித்து முன்னேறு தமிழர்குடி மறவரடி மறவரடி தமிழர்குடி தங்கத்தமிழெங்கள் உயிராக வேண்டும் உயிர்போனபோதும் தமிழ்வாழ வேண்டும் பார் பார் விழித்துப்பார் &#8211; உன் வாழ் நிலையை நினைத்துப் பார் யார் யார் அடைத்ததார் &#8211; உன் மனதைக் கூண்டில் அடைத்ததார் தமிழை மறுத்து மறைத்து வாழும் வாழ்வில் பயனே இல்லை &#8211; உன் சொந்த இனத்தை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மறவர்குடி மலிந்தபடி மடிந்துபோவதெப்படி<br />
தடையை அடி படையை அடி ஏறு நீ படிப்படி<br />
தடைகள் தகர்த்து படைகள் உடைத்து<br />
துணிவாய் முடித்து முன்னேறு<br />
தமிழர்குடி மறவரடி மறவரடி தமிழர்குடி</p>
<p>தங்கத்தமிழெங்கள் உயிராக வேண்டும்<br />
உயிர்போனபோதும் தமிழ்வாழ வேண்டும்</p>
<p>பார் பார் விழித்துப்பார் &#8211; உன்<br />
வாழ் நிலையை நினைத்துப் பார்<br />
யார் யார் அடைத்ததார் &#8211; உன்<br />
மனதைக் கூண்டில் அடைத்ததார்<br />
தமிழை மறுத்து மறைத்து வாழும் வாழ்வில் பயனே இல்லை &#8211; உன்<br />
சொந்த இனத்தை மறைக்கப்போனா மனுசன் நீயும் இல்லை<br />
கண்டதுக்கும் வளைஞ்சு கொடுக்க தமிழன் தண்ணி இல்லை &#8211; என்றும்<br />
குப்பை வாழ்க்கை வாழ நீயும் சேத்துப் பண்ணி இல்லை<br />
செந்தமிழா எழுந்து வா செந்தமிழைக் காக்க வா<br />
தமிழர் குடி மறவரடி மறவர் குடி தமிழரடி</p>
<p>மறவர்குடி மலிந்தபடி மடிந்துபோவதெப்படி<br />
தடையை அடி படையை அடி ஏறு நீ படிப்படி<br />
தடைகள் தகர்த்து படைகள் உடைத்து<br />
துணிவாய் முடித்து முன்னேறு<br />
தமிழர்குடி மறவரடி மறவரடி தமிழர்குடி</p>
<p>தங்கத்தமிழெங்கள் உயிராக வேண்டும்<br />
உயிர்போனபோதும் தமிழ்வாழ வேண்டும்<br />
அன்னைத் தமிழெங்கள் உயிர் மூச்சு<br />
அந்தத்தமிழ போயின் உயிர் போச்சு</p>
<p>மறவர்குடி மலிந்தபடி மடிந்துபோவதெப்படி<br />
தடையை அடி படையை அடி ஏறு நீ படிப்படி</p>
<p>குனிந்து குனிந்து நடந்ததால கூன் விழுந்து போச்சு &#8211; நீ<br />
தமிழை மறந்து திரிந்ததால தமிழ் மலிந்து போச்சு<br />
உலகம் எல்லாம் பரவியுள்ளான் தமிழன் என்று பேச்சு &#8211; அட<br />
அங்கும் இங்கும் பரவிக்கிடந்து என்ன கிழிச்சாச்சு<br />
பிரதேசவாத குப்பைகளை மறந்தெழுடா தம்பி<br />
நாம் சேர்ந்தெழுந்து முழங்கி நிண்டா எப்பகையும் தும்பி<br />
மந்திரத்தால் மாங்காய் விழும் என்று நீயும் வாழாதே &#8211; உன்<br />
தந்திரத்தால் வீழ்த்தி விடு ஆண்டவனைக் கேளாதே</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பொறாமை</title>
		<link>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%88/</link>
		<comments>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%88/#comments</comments>
		<pubDate>Sun, 21 Feb 2010 23:20:24 +0000</pubDate>
		<dc:creator>sujeethg</dc:creator>
				<category><![CDATA[lyrics]]></category>

		<guid isPermaLink="false">http://sujeethg.me/?p=104</guid>
		<description><![CDATA[உலகம் வளர நீ அடிக்கடி தடுக்கும் தினமும் முதுகினில் சமரது தொடுக்கும் தொடர்ந்து நடந்திடு தடை ஓடி ஒளிக்கும் உனக்கும் உறுதியாய் புதுவழி கிடைக்கும் என்னைக் கவிழ்க்க சிலர் உள்ளம் துடிக்கும் என்னில் குறை காண தினமும் தவிக்கும் என்னைப் பொய்யனெனச் சொல்லித் தொலைக்கும் நான் போகும் வழி எல்லாம் குழியைப் பறிக்கும் என்பெயர் சொல்ல இங்கென் வாழ்க்கை இல்லை சொல்லித் திரிவதிலும் பயனேதும் இல்லை வாழ்வில் பட்டதையே நான் சொல்லிப்போவேன் &#8211; என் கையில் சுட்டதையும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>உலகம் வளர நீ அடிக்கடி தடுக்கும்<br />
தினமும் முதுகினில் சமரது தொடுக்கும்<br />
தொடர்ந்து நடந்திடு தடை ஓடி ஒளிக்கும்<br />
உனக்கும் உறுதியாய் புதுவழி கிடைக்கும்</p>
<p>என்னைக் கவிழ்க்க சிலர் உள்ளம் துடிக்கும்<br />
என்னில் குறை காண தினமும் தவிக்கும்<br />
என்னைப் பொய்யனெனச் சொல்லித் தொலைக்கும்<br />
நான் போகும் வழி எல்லாம் குழியைப் பறிக்கும்<br />
என்பெயர் சொல்ல இங்கென் வாழ்க்கை இல்லை<br />
சொல்லித் திரிவதிலும் பயனேதும் இல்லை<br />
வாழ்வில் பட்டதையே நான் சொல்லிப்போவேன் &#8211; என்<br />
கையில் சுட்டதையும் நான் சொல்லிப்போவேன்<br />
நீ தந்த வரத்திற்கு இயற்கையே நன்றி<br />
நான் இங்கு வெறும் புழுதி உன் கருணை இன்றி<br />
உனக்காக பணிசெய்வேன் வரையறை இன்றி<br />
தூற்றுவார் தூற்றட்டும் அவர் காட்டுப் பன்றி</p>
<p>உலகம் வளர நீ அடிக்கடி தடுக்கும்<br />
தினமும் முதுகினில் சமரது தொடுக்கும்<br />
தொடர்ந்து நடந்திடு தடை ஓடி ஒளிக்கும்<br />
உனக்கும் உறுதியாய் புதுவழி கிடைக்கும்</p>
<p>வரி கொண்டு நான் பாய்வேன் நான் வரிப்புலி<br />
தவறேதும் நான் செய்யேன் எனக்கேது கிலி<br />
சமுதாய மேம்பாட்டில் நான் சின்ன உளி<br />
தடுமாறிப்போனாலே அன்றே நான் பலி<br />
ஐயோ எனக்கிங்கே எதிரிகள் வேண்டாம்<br />
கூடித்திரியவும் நண்பர்கள் வேண்டாம்<br />
தன்னந்தனியாயே நான் இங்கு வந்தேன்<br />
இன்னும் சில நாளில் நான் மாண்டு போறேன்</p>
<p>பொங்கும் பொறாமையும் ஒங்கும் எரிச்சலும்<br />
வாழ்வில் வந்துவிட்டால் அமைதி இருக்காது<br />
மங்கும் வாழ்வுதனில் எங்கும் அன்பு கொண்டால்<br />
சொர்க்கம் என்ற ஒன்று வேறெங்கும் இருக்காது</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பூவரசம் பூ</title>
		<link>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87/</link>
		<comments>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87/#comments</comments>
		<pubDate>Sun, 21 Feb 2010 23:19:37 +0000</pubDate>
		<dc:creator>sujeethg</dc:creator>
				<category><![CDATA[lyrics]]></category>

		<guid isPermaLink="false">http://sujeethg.me/?p=101</guid>
		<description><![CDATA[பூவரசம் பூவே நீதான் என் ஜீவரசம் என்றும் நான் நாடும் தேன் கலசம் ஆடலாம் பெண்ணே நாம் சரசம் ஓடிவா கண்ணே என்னத்தைச் சொல்லி நான் என்னத்தைச் செய்ய காதலைக் கடையில சொல்லவா செய்ய பழம் நழுவிப் பாலில் விழும் எண்டு பாத்தா பழம் விழாமப் பாலும் பழம் பாலாப் போச்சா இது என்ன ஞாயம் துன்பம் என்னில்ப் பாயும் இன்பம் மெல்லச்சாயும் மனசெல்லாம் காயம் என்னத்தைச் சொல்லி நான் என்னத்தைச் செய்ய காதலைக் கடையில சொல்லவா [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பூவரசம் பூவே நீதான் என்<br />
ஜீவரசம் என்றும் நான் நாடும்<br />
தேன் கலசம் ஆடலாம் பெண்ணே<br />
நாம் சரசம் ஓடிவா கண்ணே</p>
<p>என்னத்தைச் சொல்லி நான் என்னத்தைச் செய்ய<br />
காதலைக் கடையில சொல்லவா செய்ய<br />
பழம் நழுவிப் பாலில் விழும் எண்டு பாத்தா<br />
பழம் விழாமப் பாலும் பழம் பாலாப் போச்சா<br />
இது என்ன ஞாயம் துன்பம் என்னில்ப் பாயும்<br />
இன்பம் மெல்லச்சாயும் மனசெல்லாம் காயம்<br />
என்னத்தைச் சொல்லி நான் என்னத்தைச் செய்ய<br />
காதலைக் கடையில சொல்லவா செய்ய</p>
<p>என்னைத் தெரியாதோ அன்பு புரியாதோ<br />
இதயம் கிடையாதோ உணர்வு தெளியாதோ<br />
கண்ணே நில்லடி கண்கள் பாரடி<br />
காதல் சொல்லடி இல்லை கொல்லடி<br />
நீயில்லா வாழ்க்கை தீ தின்னல் போன்றது<br />
நிம்மதி இன்றிங்கு வாழ்வை யார் வென்றது<br />
பெண்ணே என்னைப் பார் கண்கள் தன்னைப் பார்<br />
கண்ணில் கசிந்தோடும் துன்பம் தன்னைப் பார்</p>
<p>பூவரசம் பூவே நீதான் என்<br />
ஜீவரசம் என்றும் நான் நாடும்&#8230;</p>
<p>பாறைக்குள் நான் இங்கேன் நீரைத் தேடினேன்<br />
அவளுக்குள் வீணாக என்னைத் தேடினேன்<br />
இன்பம் துள்ள வாழும் அவளைப் பார்க்கிறேன்<br />
அல்லல் பட்டு வீழும் என்னை வேர்க்கிறேன்<br />
மனமே மரத்துப்போ அவளைத் தொலைத்துப்போ<br />
விழியில் நீர் போதும் வேண்டாம் இனி ஏதும்<br />
வாழ்வில் அலைமோதும் காலம் இனி மாறும்<br />
யாவும் சரியாகும் வாழ்வு புதிதாகும்</p>
<p>பழையன கழிதலும் புதியன புகுதலும்<br />
வாழ்வில் புதிதில்லை தொல்லை இனியில்லை<br />
வலியது வருவதும் மீண்டது போவதும்<br />
என்றும் புதிதில்லை வாழ்வு வேறில்லை<br />
இன்பம் முன்னர் வரும் துன்பம் பின்னர் வரும்<br />
துன்பம்; முன்னர் வரும் இன்பம் பின்னர் வரும்<br />
வாழ்வை வாழுவேன் வாழ்வை வெல்லுவேன்<br />
தொல்லை இனியில்லை தோற்பும் இனியில்லை</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பகை</title>
		<link>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88/</link>
		<comments>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88/#comments</comments>
		<pubDate>Sun, 21 Feb 2010 23:18:39 +0000</pubDate>
		<dc:creator>sujeethg</dc:creator>
				<category><![CDATA[lyrics]]></category>

		<guid isPermaLink="false">http://sujeethg.me/?p=99</guid>
		<description><![CDATA[எம்மை சரிக்க நினைக்கும்  உன்தன் கதை முடிக்கும் வரைக்கும் துளியும் இல்லை எங்கள் கண்ணில் உறக்கம் நெருங்கி நெருங்கி வந்து &#8211; செத்துப் போ பதுங்கி பதுங்கி வந்து   &#8211; பட்டுப் போ அடிக்கும் அடியினிலே உன்தன் கதி கலங்கும் தப்பிப்போ தப்பிப்போ என்று உள்ளே மனம் புலம்பும் சுருட்டி எடுத்துக் கொண்டு இன்றே விட்டுப்போ &#8211; இல்லை சுருண்டு விழுந்தபடி நாளை செத்துப் போ எல்லையை நீ கடக்கிறாய் &#8211; நிறுத்து இன்று பகையை நீ [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எம்மை சரிக்க நினைக்கும்  உன்தன் கதை முடிக்கும்<br />
வரைக்கும் துளியும் இல்லை எங்கள் கண்ணில் உறக்கம்<br />
நெருங்கி நெருங்கி வந்து &#8211; செத்துப் போ<br />
பதுங்கி பதுங்கி வந்து   &#8211; பட்டுப் போ<br />
அடிக்கும் அடியினிலே உன்தன் கதி கலங்கும்<br />
தப்பிப்போ தப்பிப்போ என்று உள்ளே மனம் புலம்பும்<br />
சுருட்டி எடுத்துக் கொண்டு இன்றே விட்டுப்போ &#8211; இல்லை<br />
சுருண்டு விழுந்தபடி நாளை செத்துப் போ</p>
<p>எல்லையை நீ கடக்கிறாய் &#8211; நிறுத்து இன்று<br />
பகையை நீ வளர்க்கிறாய் முறிப்போம் நின்று<br />
அமைதியாய் இருப்பது பயத்தால் அன்று<br />
அடக்க நாம் நினைக்கையில் புரியும் அன்று<br />
இடியாய் படையெடுக்க உனக்குள்ளே எரியும்<br />
எளிதாய் கதை முடிக்க உனக்கது புரியும்<br />
அழகாய் அகன்று விடு நிம்மதியும் தெரியும்<br />
தொடர்ந்து நிமிர்ந்து நின்றால் உன்தன் உயிர் பிரியும்</p>
<p>உனக்கேன் உனக்கேன் பகையும் உனக்கேன்<br />
தலைக்கேன் தலைக்கேன் கனமும் தலைக்கேன்<br />
விளக்கேன் விளக்கேன் அதை நீ விளக்கேன்<br />
உனக்கேன் உனக்கேன் பகையும் உனக்கேன்</p>
<p>எங்கே வந்து பார் எம்மில் முட்டிமோதிப் பார்<br />
எங்கே வந்து பார் எம்மில் முட்டிமோதிப் பார்</p>
<p>உனக்கேன் உனக்கேன் பகையும் உனக்கேன்<br />
தலைக்கேன் தலைக்கேன் கனமும் தலைக்கேன்</p>
<p>தொலைக் துடைக்க இல்லை நாம் புழுதி<br />
பொறுக்கப் பொறுக்க கொதிக்கும் குருதி<br />
துடிக்கத் துடிக்க முறிப்போம் பிளிறி<br />
அழித்துத் தொலைக்க எடுத்தோம் உறுதி<br />
வெட்டக் குணம் கொண்டோம் எட்ட நீ போ<br />
கொட்டத் திடம் கொண்டால் செத்து நீ போ<br />
முட்டும் மனம் கொண்டோம் விட்டு நீ போ &#8211; என்றும்<br />
வெற்றிப் படை என்றே வீழ்த்தி நிற்போம்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஓ.சாமி</title>
		<link>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%93-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/</link>
		<comments>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%93-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Sun, 21 Feb 2010 23:17:29 +0000</pubDate>
		<dc:creator>sujeethg</dc:creator>
				<category><![CDATA[lyrics]]></category>

		<guid isPermaLink="false">http://sujeethg.me/?p=97</guid>
		<description><![CDATA[வாய்மை எது பொய்மை எது எப்படித்தான் தெரியும் நல்லதெது கெட்டதெது பட்டபின்னே புரியும் பட்டவரை சுட்டவரை யாரும் சொல்ல முடியும் நீயே பட்டுவிட்டால் மட்டும் வலியது புரியும் ஐயோ ஐயோ என்ன சாமி என்ன நானும் பண்ண சாமி கந்தா கடம்பா கந்தசாமி ஊரில யாரை நம்ப சாமி தெருவில ஆயிரம் கள்ளச்சாமி கொஞ்சம் தானே நல்ல சாமி நல்லவன நீ காட்டிச் சாமி மற்றவன நீ ஒட்டு சாமி மந்திர யானைத் தும்பிக்கை எல்லாம் மூடநம்பிக்கை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வாய்மை எது பொய்மை எது எப்படித்தான் தெரியும்<br />
நல்லதெது கெட்டதெது பட்டபின்னே புரியும்<br />
பட்டவரை சுட்டவரை யாரும் சொல்ல முடியும்<br />
நீயே பட்டுவிட்டால் மட்டும் வலியது புரியும்</p>
<p>ஐயோ ஐயோ என்ன சாமி என்ன நானும் பண்ண சாமி<br />
கந்தா கடம்பா கந்தசாமி ஊரில யாரை நம்ப சாமி<br />
தெருவில ஆயிரம் கள்ளச்சாமி கொஞ்சம் தானே நல்ல சாமி<br />
நல்லவன நீ காட்டிச் சாமி மற்றவன நீ ஒட்டு சாமி</p>
<p>மந்திர யானைத் தும்பிக்கை எல்லாம் மூடநம்பிக்கை<br />
அழகாய் இருக்கிற காவிக்க எத்தனை கள்ளர் சீவிக்க<br />
ஆத்திரம் வருது சிந்திக்க எவனப் பிடிச்சு சொறிஞ்சிக்க<br />
சொந்த வழியத் தேடிக்க மந்த வழியை தொலைச்சுக்க</p>
<p>பூச்சுத்துறார் காதில் பூச்சுத்துறார் &#8211; இங்கே<br />
தாம் வாழ உன்காதில் பூச்சுத்துறார்<br />
பொய் பேசுறார் அவர் பொய் பேசுறார் கேட்டால்<br />
தெய்வம் குற்றம் என்று பொய் பேசுறார்</p>
<p>வாய்மை எது பொய்மை எது எப்படித்தான் தெரியும்</p>
<p>கடவுளைத் துணையா வைச்சுக்கொண்டு எல்லாக்களவும் நடக்குது<br />
அத்தனை மதத்கூரைக்குள்ளும் அங்கும் இங்கும் இருக்குது<br />
மூளையைக் களட்டி வைச்சுப்போட்டா ஊர்ல சனம் திரியுது<br />
திரும்பத்திரும்ப நினைச்சுப் பாக்க உள்ள மனம் எரியுது</p>
<p>பணம் இருந்தா பாவமன்னிப்பு பணம் இல்லையா பாவம் &#8211; மன்னிப்பு<br />
பதவி இருக்கா உனக்கு அல்லிப்பூ பதவி இல்லையா தின் அலரிப்பூ<br />
இரவாப் பகலா உழைச்சத கண்டவனிட்ட அழிக்குது<br />
நல்லது கெட்டது கதைக்கப்போனா என்னச் சனம் முறைக்குது</p>
<p>கள்ளச்சாமி பையுக்க நுழைக்கிறான் காணிக்கை<br />
கள்ளங்கள வளக்கிறார் இதுதானே வேடிக்கை<br />
கடவுள நீயும் பாக்கிறதெண்டா கண்ணக் கொஞ்சம் மூடிக்க<br />
நடுவில நாலு நந்தி எதுக்கு கடவுள நீயும் தரிசிக்க</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%93-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மச்சானப் பாரடி</title>
		<link>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf/</link>
		<comments>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Sun, 21 Feb 2010 23:15:38 +0000</pubDate>
		<dc:creator>sujeethg</dc:creator>
				<category><![CDATA[lyrics]]></category>

		<guid isPermaLink="false">http://sujeethg.me/?p=95</guid>
		<description><![CDATA[மச்சானப் பாரடி மல்டிரலண்ட் மானடி நிக்காம போகாத வெக்கம் ஏனடி தக்காளி நீயடி தந்தனதோம் போடடி முக்காலி நான் தாறன் முத்தம் தாவண்டி வார்த்தை மொழி இன்றி வருமா காதல் மனம் இன்றி வருமா ஊடல் களி கொண்டு வரும் வாம்மா வாம்மா பெண்ணே பள்ளி கொள்ள வரவா கண்ணே என்னை மெல்லத் தரவா அன்பே அள்ளி அணைத்திட வாம்மா வாம்மா என்னவளே பொன்மலரே பொன்மனனே வெக்கம் விலக்கிடு கார்விழியே காவிரியே காதல்நீ வரம் கண்மணியே பொன்மணியே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மச்சானப் பாரடி மல்டிரலண்ட் மானடி<br />
நிக்காம போகாத வெக்கம் ஏனடி<br />
தக்காளி நீயடி தந்தனதோம் போடடி<br />
முக்காலி நான் தாறன் முத்தம் தாவண்டி</p>
<p>வார்த்தை மொழி இன்றி வருமா<br />
காதல் மனம் இன்றி வருமா<br />
ஊடல் களி கொண்டு வரும் வாம்மா வாம்மா</p>
<p>பெண்ணே பள்ளி கொள்ள வரவா<br />
கண்ணே என்னை மெல்லத் தரவா<br />
அன்பே அள்ளி அணைத்திட வாம்மா வாம்மா</p>
<p>என்னவளே பொன்மலரே பொன்மனனே வெக்கம் விலக்கிடு<br />
கார்விழியே காவிரியே காதல்நீ வரம்<br />
கண்மணியே பொன்மணியே மின்மினியே கட்டியணைத்திடு<br />
சேர்ந்திருப்பேன் பார்த்திருப்பேன் காத்திருப்பேன் நிதம்</p>
<p>நான் அழைச்சா நீ ஓடிவா<br />
நான் ஒளிச்சா நீ தேடிவா<br />
நீ துளி தேன் உனைக் காதலித்தேன்<br />
என்னைக் காதலியேன் இல்லை நான் தவிப்பேன்<br />
தேவதையே என்னைப் பார் ரதியே<br />
எந்தன் பூவிழியே என்னைக் காதலியே</p>
<p>வார்த்தை மொழி இன்றி வருமா<br />
காதல் மனம் இன்றி வருமா<br />
ஊடல் களி கொண்டு வரும் வாம்மா வாம்மா<br />
பெண்ணே பள்ளி கொள்ள வரவா<br />
கண்ணே என்னை மெல்லத் தரவா<br />
அன்பே அள்ளி அணைத்திட வாம்மா வாம்மா</p>
<p>நீ படிச்சா நான் ஆடவா<br />
நீ அடிச்சா நான் ஓடவா<br />
ஊர்வசியே என்னில் நீ வசியே<br />
என்னை நீ ரசியே என்றும் நீ ருசியே<br />
நான் தொலைந்தேன் உன்னில்த்தான் தொலைந்தேன்<br />
சரண் நான் அடைந்தேன் உன்தன் கால் விழுந்தேன்</p>
<p>வார்த்தை மொழி இன்றி வருமா<br />
காதல் மனம் இன்றி வருமா<br />
ஊடல் களி கொண்டு வரும் வாம்மா வாம்மா<br />
பெண்ணே பள்ளி கொள்ள வரவா<br />
கண்ணே என்னை மெல்லத் தரவா<br />
அன்பே அள்ளி அணைத்திட வாம்மா வாம்மா</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கலவி</title>
		<link>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf/</link>
		<comments>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Sun, 21 Feb 2010 23:14:51 +0000</pubDate>
		<dc:creator>sujeethg</dc:creator>
				<category><![CDATA[lyrics]]></category>

		<guid isPermaLink="false">http://sujeethg.me/2010/02/21/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[உருகுது மருகுது மஞ்சம் கொடு தளிரிது பிளிறுது தஞ்சம் கொடு பித்தம் கொண்டாடுது சித்தம் திண்டாடுது படமெடுத்தாடுது பதியுனை நினைத்தே புதிர்தொடுத்தாடு நீ எனையெடுத்தே அடிக்கடி இனி முத்தச்சத்தம் தகதகவென மனம் பத்தும் கொதிகொதிக்குது ரத்தம் நித்தம் உதிக்குமேயினி  ஒரு யுத்தம் கண்கள் வெறித்திட ரத்தம் கொதிக்குதோ மேல்ல விரல்பட உள்ளம் சிலிர்க்குதோ அள்ளி அணைத்திட அனல் பறக்குதோ அன்பில் அடிபட எல்லாம் துடிக்குதோ கண்ணே பெண்ணே ராதை நீதான் என்தன் பாவை கண்ணில் காமம் கொண்டு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>உருகுது மருகுது மஞ்சம் கொடு<br />
தளிரிது பிளிறுது தஞ்சம் கொடு<br />
பித்தம் கொண்டாடுது சித்தம் திண்டாடுது<br />
படமெடுத்தாடுது பதியுனை நினைத்தே<br />
புதிர்தொடுத்தாடு நீ எனையெடுத்தே</p>
<p>அடிக்கடி இனி முத்தச்சத்தம்<br />
தகதகவென மனம் பத்தும்<br />
கொதிகொதிக்குது ரத்தம் நித்தம்<br />
உதிக்குமேயினி  ஒரு யுத்தம்</p>
<p>கண்கள் வெறித்திட ரத்தம் கொதிக்குதோ<br />
மேல்ல விரல்பட உள்ளம் சிலிர்க்குதோ<br />
அள்ளி அணைத்திட அனல் பறக்குதோ<br />
அன்பில் அடிபட எல்லாம் துடிக்குதோ<br />
கண்ணே பெண்ணே ராதை நீதான் என்தன் பாவை<br />
கண்ணில் காமம் கொண்டு வந்தேன் உன்தன் பாதை<br />
என்னைத்தாங்கிக் கொண்டு செய்வாயோ நீசேவை<br />
உள்ளம் சேர்ந்தபடி தாண்டுவோம் இப்பூவை<br />
அன்பே கயல்விழி நான் முயலடி<br />
அந்த வகைப்படி நான் உன் பக்கமடி<br />
பெண்ணே உன்னை தாதா நீதான் என்தன் ராதா<br />
கண்ணே காமம் கொண்டு பக்கம் வந்தேன் வாவா</p>
<p>விரைந்திடு விரகத்தின் விரல் நுனி போவோம்<br />
விடிந்ததும் மறுபடி புதுமுனை போவோம்<br />
கூடல் தேடித்தரும் புதிது<br />
முழுவதும் அறிந்தவர் அரிது</p>
<p>உருகுது மருகுது மஞ்சம் கொடு<br />
தளிரிது பிளிறுது தஞ்சம் கொடு</p>
<p>படமெடுத்தாடுது பதியுனை நினைத்தே<br />
புதிர்தொடுத்தாடு நீ எனையெடுத்தே</p>
<p>அடிக்கடி இனி முத்தச்சத்தம்<br />
தகதகவென மனம் பத்தும்<br />
கொதிகொதியென ரத்தம் நித்தம்<br />
உதிக்குமேயினி  ஒரு யுத்தம்</p>
<p>உனக்கும் எனக்கும் பிடிக்கும் வெறிக்கு உலகம் பொடியாய் வெடிக்குமோ<br />
அடித்து முடித்து அணைத்த பிறகும் விரகம் முளையாய் முளைக்குமோ<br />
வளைத்து நெளித்து சுழித்து சுவைக்க கொடியே நீயும் தேடி வா<br />
இருட்டில் விளக்கை அணைத்து முடித்து புதிய பொருளைத் தேட வா</p>
<p>நித்தம் போடும் முத்தச் சத்தம்  எண்ண மனம் சிலிர்க்குது<br />
சித்தம் கொண்ட சித்தத்தினால் கூட மனம் துடிக்குது<br />
ரத்தம் பாயும் வேகத்தில உள்ளே அனல் அடிக்குது<br />
பத்தினிக்குப் பத்துப்போட உள்ள மணி அடிக்குது</p>
<p>கனியே பனியே மணியே தனியே எனையே நீயும் தேடவா<br />
விழியின் வழியே பொழியும் ஒளியே போதும் நீயும் கூட வா<br />
அடியே கொடியே விடிய விடிய மடைகள் தாண்டி ஓடவா<br />
எரியும் விளக்கை அணைத்து முடித்து புதிய பொருளைத் தேட வா</p>
<p>நயனங்களில் சந்தித்தோம்   தோம் தோம்  தோம்<br />
மனமெங்கிலும் தித்தித்தோம்  தோம் தோம் தோம்<br />
உடலெங்கிலும் தத்திந்தோம்  தோம் தோம் தோம்<br />
இன்பம் கொண்டோம்<br />
உடையது விடை பெற புதுவிடை வருதே</p>
<p>உருகுது மருகுது மஞ்சம் கொடு<br />
தளிரிது பிளிறுது தஞ்சம் கொடு<br />
பித்தம் கொண்டாடுது சித்தம் திண்டாடுது<br />
படமெடுத்தாடுது பதியுனை நினைத்தே<br />
புதிர்தொடுத்தாடு நீ எனையெடுத்தே</p>
<p>அடிக்கடி இனி முத்தச்சத்தம்<br />
தகதகவென மனம் பத்தும்<br />
கொதிகொதிக்குது ரத்தம் நித்தம்<br />
உதிக்குமேயினி  ஒரு யுத்தம்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பூமறாங்</title>
		<link>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%be%e0%ae%99%e0%af%8d/</link>
		<comments>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%be%e0%ae%99%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 21 Feb 2010 23:13:16 +0000</pubDate>
		<dc:creator>sujeethg</dc:creator>
				<category><![CDATA[lyrics]]></category>

		<guid isPermaLink="false">http://sujeethg.me/?p=91</guid>
		<description><![CDATA[பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்! மெல்லத் தமிழினிச் சாகும் எனக்கேட்டேன் &#8211; சொன்ன பிறவிக்கு கையால் ரெண்டு போட்டேன் மெல்லத்தமிழிங்கி னிச்சாகுமே பாரீர் வெல்லத்துளிபோல் சுவைக்கத்தானே போறீர் பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்! எப்போதும் எதுகொண்டும் தமிழ் தன்னை அடித்தாலும் ஆனா முதற் கொண்டு அகேனத்தை அழித்தாலும் ஆரம்பம் முதற்கொண்டு அடிவரை நாம் போவோம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!<br />
பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!</p>
<p>மெல்லத் தமிழினிச் சாகும் எனக்கேட்டேன் &#8211; சொன்ன<br />
பிறவிக்கு கையால் ரெண்டு போட்டேன்<br />
மெல்லத்தமிழிங்கி னிச்சாகுமே பாரீர்<br />
வெல்லத்துளிபோல் சுவைக்கத்தானே போறீர்</p>
<p>பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!<br />
பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!</p>
<p>எப்போதும் எதுகொண்டும் தமிழ் தன்னை அடித்தாலும்<br />
ஆனா முதற் கொண்டு அகேனத்தை அழித்தாலும்<br />
ஆரம்பம் முதற்கொண்டு அடிவரை நாம் போவோம்<br />
பூகம்பம் வரக்கூடும் முயன்றே பின் நாம் சாவோம்<br />
பகைவரின் சூட்சிக்கு பதறாது எங்கள் கை<br />
தமிழ்தன்னின் வீழ்ச்சிக்கு இடங்கொடா தெங்கள் கை<br />
முயற்சி என்றொண்டிங்கு உள்ளவரை மூச்சிருக்கும்<br />
அயர்ச்சியே கிடையாது எள்ளளவே பேச்சிருக்கும்<br />
இலட்சியப் பாதை எங்கும் முழுவேக வீச்சிருக்கும்<br />
தமிழ் தின்ன வந்தவரை செந்தமிழர் மூச்செரிக்கும்<br />
தமிழ் காக்க வந்தவர் நாம் என்றும் எங்கள் பேச்சிருக்கும்<br />
தடுத்தாள வந்தவர்கள் நெஞ்சம் தன்னில் மூச்சிழுக்கும்</p>
<p>பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!<br />
பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!</p>
<p>தமிழுக்கும் அமுதென்று பேர் &#8211; அந்த<br />
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்<br />
தமிழெங்கள் பிறவிக்குத் தாய் &#8211; இன்பத்<br />
தமிழெங்கள் வளமிக்க உளமுற்ற தீ</p>
<p>பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!<br />
பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!</p>
<p>தமிழ் எங்கள் மூச்சு உயிர் மூச்சு<br />
அது எங்கள் பேச்சு உயிர் பேச்சு<br />
தமிழ் எங்கள் வீச்சு வாள் வீச்சு<br />
தமிழ் நின்று போச்சு உயிர் போச்சு<br />
எதுவந்தபோதும் தமிழ் மோதும்<br />
இடர் வந்தபோது மனம் மோதும்<br />
தமிழுக்காய் மோதும் இது மோதும்</p>
<p>பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!<br />
பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!</p>
<p>தமிழ்குத் தடியெடுத்தால் எமக்குப் பிடிக்காது<br />
தமிழைப் பலியெடுத்தால் எமக்குப் பிடிக்காது<br />
தமிழில் படையெடுத்தால் எமக்குப் பிடிக்காது<br />
தொடர்ந்தால் அவர்க்கு என்றும் நிம்மதி இருக்காது</p>
<p>பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!<br />
பூம்பூம் பூம் பூமறாங்! பூம்பூம் பூம் பூமறாங்!</p>
<p>தமிழர்தனைக் நாம் காக்க வருவோம் என்றும் புறப்பட்டு<br />
நிறுத்த இங்கு முடியாது யாரும் நம்மை தடைபோட்டு<br />
சேர்ந்தே இன்று எழுவோம் நாம் எழுந்து நீயும் கொடிகட்டு<br />
இனிமேல் இங்கு கிடையாது தமிழில் என்றும் விளையாட்டு</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%be%e0%ae%99%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பயணம்</title>
		<link>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 21 Feb 2010 23:10:38 +0000</pubDate>
		<dc:creator>sujeethg</dc:creator>
				<category><![CDATA[lyrics]]></category>

		<guid isPermaLink="false">http://sujeethg.me/?p=88</guid>
		<description><![CDATA[பயணம் பயணம் வாழ்க்கை பயணம் பயணம் முடியவே வருமாம் மரணம் பயண இடையிலும் வரலாம் மரணம் &#8211; நீ வரணும் வரணும் இதை அறிய வரணும் &#8211; நீ வாழ்க்கை வாழவென ஏட்டிலே படித்தாய் &#8211; நீ போகும் வழியிலே றோட்டிலே மறந்தாய் &#8211; நீ சேரும் கூட்டத்தில் உன்னையே கரைத்தாய் நீ இருக்கும் சுயத்தினை அடியோடு இழந்தாய் &#8211; நீ இழந்து போனதை திருப்பிட மறுத்தாய் &#8211; நீ இழக்கப் போவதை என்றுதான் நினைப்பாயோ &#8211; [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பயணம் பயணம் வாழ்க்கை பயணம்<br />
பயணம் முடியவே வருமாம் மரணம்<br />
பயண இடையிலும் வரலாம் மரணம் &#8211; நீ<br />
வரணும் வரணும் இதை அறிய வரணும் &#8211; நீ</p>
<p>வாழ்க்கை வாழவென ஏட்டிலே படித்தாய் &#8211; நீ<br />
போகும் வழியிலே றோட்டிலே மறந்தாய் &#8211; நீ<br />
சேரும் கூட்டத்தில் உன்னையே கரைத்தாய் நீ<br />
இருக்கும் சுயத்தினை அடியோடு இழந்தாய் &#8211; நீ<br />
இழந்து போனதை திருப்பிட மறுத்தாய் &#8211; நீ<br />
இழக்கப் போவதை என்றுதான் நினைப்பாயோ &#8211; நீ</p>
<p>குழந்தைப் பருவத்தில் செல்லமாய் வளர்ந்தாய் &#8211; நீ<br />
நாட்டு நடப்பாலே புலத்தினை பெயர்ந்தாய் &#8211; நீ<br />
வந்து சேர்ந்ததும்  ஒழுங்காக இருந்தாய் &#8211; நீ<br />
காலம் கடந்திட விலகியே போனாய் &#8211; நீ<br />
மாளும் கூட்டத்தில் மலிவாக வாழ்ந்தாய் &#8211; நீ<br />
சேர்ந்த கூட்டத்தில் உன்பங்கிற் கெடுத்தாய் &#8211; நீ<br />
வாழும் வாழ்க்கையை கணக்கிட மறந்தாய் &#8211; நீ<br />
வாழ்வின் பெறுமதி தேடிட மறந்தாய் &#8211; நீ</p>
<p>வாழ்க்கை பயணம் வா &#8211; வாழ்ந்து பார்க்கலாம்</p>
<p>நானும் யாரை இங்கு குறை சொல்ல வரவில்லை<br />
நிறைவை சொல்லிவிட்டு போகவும் நான் போவதில்லை<br />
வாழ்ந்தார் சாவார் என்று இருக்கவும் முடியவில்லை<br />
எவ்வண்ணம் சொல்வதென்று தீர்க்கமாய் தெரியவில்லை<br />
கூடவாய் பேசிவிட்டு அடிவாங்கும் எண்ணமில்லை<br />
அதற்காய் வாய்மூடி இருக்கவும் முடியவில்லை<br />
அண்ணன் தம்பி மார்க்கு அன்புவழி சொல்லாமல்<br />
அடுத்தோர் இடம்போய் சொல்வதற்கு இஷ்டமில்லை</p>
<p>எனக்கு உனக்கென தனித்துவம் வேணுமடா<br />
அவன்தான் மனிதன் ஊர் சொல்லவேணுமடா<br />
பிறந்தார் இறந்தார் சொல்லுவதில் ஆசையில்லை<br />
ஒன்றுமே செய்யாமல் மாளுவதில் லாபம் இல்லை<br />
உனக்குள் தூங்கிடும் சுயத்தினை எழுப்பிடு<br />
உருளும் உலகத்திற் குன் பங்கைக் கொடுத்திடு<br />
எழும்பு எழும்புடா துடித்து நீ கிளம்பு<br />
வளரும் தமிழுக்கு நீயு முதுகெலும்பு</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://sujeethg.me/2010/02/21/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
